ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்கு பதிவு | AIADMK

x

உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாய்களில் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உட்பட 56 பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி ஆர்.பி.உதயகுமார், அதிமுக தொண்டர்களுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

போலீஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததை தொடர்ந்து ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 56 அதிமுகவினர் மீது அனுமதியின்றி கூடியது, வழியை மறித்து போராட்டம் நடத்தியது ஆகிய இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்