"மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது" - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னையில் நடைபாதை சீரமைப்பு பணிக​ளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக கவனம் செலுத்தி, உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
x
சென்னையில் நடைபாதை சீரமைப்பு பணிக​ளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக கவனம் செலுத்தி, உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நல்ல நிலையில் உள்ள நடைபாதைகளில் உள்ள கருங்கற்களை அகற்றி கிரானைட் கற்கள் ​பதிக்கப்படுவதால், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக கூறியுள்ளார். கிரானைட் கற்கள் பொருத்தினால் முதியவர்கள், சிறுவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் நிலை தடுமாறும் சூழல் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே பாதசாரிகள் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
============



Next Story

மேலும் செய்திகள்