அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி; எம்பி, எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியம் நிதியுதவி

கொரோனா தடுப்பு பணிகளுக்காக அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
x
கொரோனா தடுப்பு பணிகளுக்காக அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாயும், அதிமுக எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியமும், நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். மேலும், அதிமுக தொண்டர்களும் நிவாரண பணிகளில் அக்கறை கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்