உயிரை கொடுத்தாவது அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் - முதல்வர் பழனிசாமி
சிவகங்கையில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரண்மனை வாசலில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
சிவகங்கையில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரண்மனை வாசலில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், நாட்டு மக்களின் நண்மைக்காக சேர்ந்த கூட்டணி தான் அதிமுக கூட்டணி என்றும், திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் தெரிவித்தார். முதல்வர் பதவி மக்கள் கொடுத்தது என்ற அவர், ஸ்டாலின் தூங்கும்போது கூட முதல்வர் என கனவு காண்கிறார் என்றார். உயிரைக் கொடுத்தாவது அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்தார்
Next Story