காங். தலைவராக சோனியாகாந்தி நீடிப்பார் - கட்சி தீர்மானம்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியாகாந்தி நீடிப்பார் என அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
காங். தலைவராக சோனியாகாந்தி நீடிப்பார் - கட்சி தீர்மானம்
x
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி குறித்து, சர்ச்சை எழுந்த நிலையில், காணொலி காட்சி மூலம் காரிய கமிட்டி கூட்டம் 7 மணி நேரம் நடைபெற்றது.

* அதில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை இடைக்கால தலைவராக உள்ள சோனியாகாந்தி, அதே பதவியில் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

* கட்சி மற்றும் தலைமையை பலவீனமாக்க யாருக்கும் உரிமையில்லை என தெரிவித்த கூட்டத்தில், சோனியா காந்திக்கு உதவ குழு அமைக்க முடிவு செய்துள்ளனர். 

* கட்சியில் அமைப்புரீதி மாற்றம் செய்ய சோனியா காந்திக்கு அதிகாரம் அளிக்க முடிவு செய்த கூட்டத்தில், சோனியா மற்றும் ராகுலின் கேள்விகள் எதிர்க்கட்சியை நிலைகுலைய வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

* கட்சியின் உள்விவகாரங்களை வெளியில் பேசக்கூடாது என தெரிவித்த கூட்டத்தில், மோடிக்கு பெரும் சவாலை ராகுல் தந்துள்ளதாகவும் கூறினர்.  


Next Story

மேலும் செய்திகள்