"ஆளுநர் மாளிகை வர விரும்பும் அமைச்சர்கள் : தடுப்பது யார்?" - நாராயணசாமிக்கு கிரண்பேடி கேள்வி

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை விமர்சித்து முதல்வர் நாராயணசாமி, பேட்டியளித்த சூழலில், முதல்வருக்கு கிரண்பேடி சில கேள்விளை எழுப்பி உள்ளார்.
ஆளுநர் மாளிகை வர விரும்பும் அமைச்சர்கள் : தடுப்பது யார்? - நாராயணசாமிக்கு கிரண்பேடி கேள்வி
x
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை விமர்சித்து முதல்வர் நாராயணசாமி, பேட்டியளித்த சூழலில், முதல்வருக்கு கிரண்பேடி சில கேள்விளை எழுப்பி உள்ளார். விதிகள் இருவருக்கும் பொருந்தும் என்றும் மோசமான மொழியில் கேவலமான சுவரொட்டிகள் ஒட்டுவது சரியா என கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு அமைச்சர்கள் வர விரும்பும்போது அவர்களை தடுப்பவர்கள் யார் என்றும் கேட்டுள்ளார். இரவில் ஸ்கூட்டரில் தங்களை மறைத்து கொண்டு வரும் அமைச்சர்கள், தாங்கள் வந்ததை தெரியப்படுத்தவேண்டாம் என கூறுவதை பார்க்கும்போது இவை என்ன விதிகள் என்றும் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்