ப. சிதம்பரத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாள் வாழ்த்து : மோடிக்கு ப. சிதம்பரம் பதிலடி
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரத்திற்கு, பிரதமர் நரேந்திரமோடி, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரத்திற்கு, பிரதமர் நரேந்திரமோடி, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழில் எழுதியுள்ள வாழ்த்து கடிதத்தில், எல்லா வல்ல இறைவன், தங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் தந்து, இன்று போல் என்றென்றும் மக்களுக்கு சேவையாற்ற உங்களை, ஆசீர்வதிக்கட்டும் என பிரதமர் மோடி, குறிப்பிட்டு இருந்தார். இதற்கு டுவிட்டர் வலை பக்கத்தில் தனது குடும்பம் மூலம் பதிலளித்துள்ள சிதம்பரம், மத்திய அரசின் துன்புறுத்தல் முடிந்த பிறகு, மீண்டும் மக்கள் பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக பதிவிட்டுள்ளார். இதனிடையே, ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை, புதன்கிழமை பிற்பகல் 3. 30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
@PMOIndia@narendramodi என் பிறந்தநாளுக்குப் பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை பெற்று வியப்பு கலந்த மகிழ்ச்சியடைந்தேன். பிரதமருக்கு நன்றி. pic.twitter.com/HGbWnkCrim
— P. Chidambaram (@PChidambaram_IN) September 24, 2019
பிரதமர் மோடியின் வாழ்த்துப்படி மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதே என் விருப்பம்.. துரதிர்ஷ்டவசமாக, திரு. மோடி அரசின் விசாரணைத் துறைகள் தடையாக இருக்கின்றனவே?
— P. Chidambaram (@PChidambaram_IN) September 24, 2019
தற்பொழுது நடைபெறும் துன்புறுத்தல் முடிந்த பிறகு, பிரதமர் மோடியின் விருப்பப்படி மீண்டும் மக்கள் பணியாற்ற ஆவலாக உள்ளேன்.
— P. Chidambaram (@PChidambaram_IN) September 24, 2019
Next Story