ஜம்மு, காஷ்மீர் ஆளுநர் அழைப்பை ஏற்றார் ராகுல் காந்தி

டெல்லியில் உட்கார்ந்து கொண்டு கருத்து சொல்லக் கூடாது என்றும், நேரில் வந்து பார்த்துவிட்டு பேச வேண்டும் எனவும் ஜம்மு, காஷ்மீர் ஆளுநர், எதிர்க்கட்சித் தலைவர்களின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்திருந்தார்.
ஜம்மு, காஷ்மீர் ஆளுநர் அழைப்பை ஏற்றார் ராகுல் காந்தி
x
டெல்லியில் உட்கார்ந்து கொண்டு கருத்து சொல்லக் கூடாது என்றும், நேரில் வந்து பார்த்துவிட்டு பேச வேண்டும் எனவும் ஜம்மு, காஷ்மீர் ஆளுநர், எதிர்க்கட்சித் தலைவர்களின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்திருந்தார். ஜம்மு, காஷ்மீர் நிலை குறித்து அறிய தேவைப்பட்டால் விமான வசதி செய்து தருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவருக்கு பதில் அளித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பிராந்தியங்களை பார்க்க விடுத்த அழைப்பை தாமும் எதிர்க்கட்சித் தலைவர்களும் ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். தங்களுக்கு விமானம் நீங்கள் ஏற்பாடு செய்யத் தேவையில்லை என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மக்கள், பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அங்குள்ள ராணுவ வீரர்களை சந்தித்து சுதந்திரமாக பேச பயணிக்க அனுமதித்தால் மட்டும் போதும் என ஜம்மு, காஷ்மீர் ஆளுநருக்கு, ராகுல் காந்தி பதிலடி அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்