காங்கிரசுக்கு அடுத்த வாரம் புதிய தலைவர் தேர்வு - பிரியங்கா காந்தி, தலைவர் பதவி ஏற்க நிர்வாகிகள் வலியுறுத்த முடிவு

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராகுல்காந்தி, தமது முடிவில் உறுதியாக இருப்பதால், வேறு வழியின்றி, புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு உருவாகி உள்ளது.
காங்கிரசுக்கு அடுத்த வாரம் புதிய தலைவர் தேர்வு - பிரியங்கா காந்தி, தலைவர் பதவி ஏற்க நிர்வாகிகள் வலியுறுத்த முடிவு
x
காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராகுல்காந்தி, தமது முடிவில் உறுதியாக இருப்பதால், வேறு வழியின்றி, புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு உருவாகி உள்ளது. இதற்காக, அக்கட்சியின் தேசிய செயற்குழு, அடுத்த வாரம் டெல்லியில் கூடுகிறது. தற்போதைய சூழலில், காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்ட, பிரியங்கா காந்தியால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கை அக்கட்சியின் நிர்வாகிகள் மட்டத்தில் உருவாகி உள்ளது. எனவே, காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டத்தில், அக்கட்சியின் புதிய தலைவராக பிரியங்கா காந்தியை தேர்ந்தெடுக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்த முடிவு செய்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, டெல்லியில் புதன்கிழமை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள், மாநில மேலிட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்