தமிழ் மொழியில் உறுதிமொழி ஏற்ற எம்.பிக்கள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள், தாய் தமிழ்மொழியில் உறுதிமொழி வாசித்து பதவி ஏற்றுக் கொண்டனர்.
தமிழ் மொழியில் உறுதிமொழி ஏற்ற எம்.பிக்கள்
x
இடைக்கால சபாநாயகர் வீரேந்திரகுமார், தமிழக எம்.பிக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதுச்சேரி எம்பி வைத்திலிங்கம், கடவுள் மீது ஆணையிட்டு தமிழில் பதவியேற்றார். அப்போது சக தமிழக எம்பிக்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். இதைத் தொடர்ந்து தமிழக எம்பிக்கள் கலாநிதி வீராச்சாமி, கனிமொழி, தமிழச்சி, தயாநிதி மாறன், டி. ஆர் பாலு, ஜெகத்ரட்சகன், திருமாவளவன், ரவிக்குமார், திருநாவுக்கரசர், ஜோதிமணி, சு.வெங்கடேசன், ரவீந்திரநாத் குமார் உள்பட அனைத்து எம்பிக்களும் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர். தயாநிதி மாறன் பதவியேற்றுக் கொண்ட போது தமிழ் வாழ்க, வாழ்க கலைஞர், வாழ்க பெரியார் என கூறினார். இதேபோல், எழுத்தாளர் ரவிக்குமார் பதவி ஏற்ற போது ,வாழ்க தமிழ், வாழ்க அம்பேத்கார் எனக் குறிப்பிட்டார். 




Next Story

மேலும் செய்திகள்