கட்சி பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விலகல்
அதிமுக அம்மா பேரவை இணை செயலாளர் பதவியை முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் எழுதிய கடிதத்தில் அதிமுகவில் பேரூராட்சி கழக செயலாளர் சட்டப்பேரவை உறுதி மொழிக்குழு தலைவர் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் வகித்ததை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தற்போது சூழ்நிலை காரணமாக மனவேதனையுடன் அம்மா பேரவை இணைச்செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அந்த கடிதத்தில் தோப்பு வெங்கடாசலம் குறிப்பிட்டுள்ளார்.
Next Story