சித்தராமையா வளையல் அணிந்துகொள்ளட்டும் - பா.ஜ.க தலைவரின் பேச்சால் சர்ச்சை

எம்எல்ஏக்களை கையாள முடியவில்லை என்றால் சித்தராமையா வளையல் அணிந்துகொள்ளட்டும் என்று கரன் லாஜே கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சித்தராமையா வளையல் அணிந்துகொள்ளட்டும் - பா.ஜ.க தலைவரின் பேச்சால் சர்ச்சை
x
கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள சிஞ்சோலி மற்றும் குந்தகோல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக இறுதி கட்ட பிரச்சாரத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் மும்மரமாக ஈடுபட்டு வரும் நிலையில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். அந்த வகையில், ஹூப்பளியில் பத்திரிகையாளர்களை சந்தித்த பாஜக தலைவர் சோபா கரன்லாஜே, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை கையாலமுடியவில்லை என்றால் சித்தராமையா வளையல் அணிந்து கொள்ளட்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சோபாவின் பேச்சுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கூட்டணி கட்சியின் ஒருங்கிணைப்புக் தலைவர் சித்தராமையா, வளையல் அணிந்தவர்கள் எல்லாம் பலவீனமானவர்கள் அல்ல. உங்களது பேச்சு பெண்களை இழிவுபடுத்துவது போல் அமைந்துள்ளது என கருத்து தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்