கமல் கூறியது வரலாற்று உண்மைகள் - திருமாவளவன்

நாதுராம் கோட்சே பற்றி கமல் கூறிய கருத்துக்கள் வரலாற்று உண்மைதான் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
x
கருவேப்பிலங்குறிச்சி திலகவதி படுகொலை மற்றும் திருவாரூர் கொல்லிமலை சாதிய வன்கொடுமை ஆகியவற்றை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,  நாதுராம் கோட்சே பற்றி கமல் கூறிய கருத்துக்கள் வரலாற்று உண்மைதான் என்றும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான் வகிக்கும் உயர்ந்த பதவியை மறந்து பேசுவது சரியல்ல என்றும் கூறினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதிமுக மெல்ல மெல்ல சங்பரிவார் சக்தியாக மாறி வருவதாக தோன்றுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்