"மத்தியில் தமிழர் விரோத ஆட்சி" - கனிமொழி
"பல்வேறு நலத்திட்டங்களை திமுக செய்துள்ளது"
மத்தியில் தமிழர் விரோத ஆட்சி நடைபெறுவதாக திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து பேசிய அவர், தென்காசியில் பேருந்து நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட திட்டங்களை திமுக செயல்படுத்தியதாக கூறினார். மக்கள் நலனில் அக்கறை இல்லாமல், ஆட்சியை தக்க வைப்பதற்காக அதிமுக-வினர் மத்திய அரசை ஆதரிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
Next Story