"ஆண்ட கட்சிகளிடம் மாற்று அரசியல் இல்லை" - சீமான்

"தமிழ் குரலை வலுப்படுத்த ஆதரவு தாருங்கள்"
ஆண்ட கட்சிகளிடம் மாற்று அரசியல் இல்லை - சீமான்
x
திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், தமிழ் குரலை நாடாளுமன்றத்தில் ஓங்கச் செய்ய தங்கள் கட்சிக்கு வாய்ப்புத் தாருங்கள் என்றார். இலவசம் என்பது திட்டமல்ல, அது ஒரு ஏமாற்று வேலை என்று கூறிய சீமான், உலகில் எங்கு சென்றாலும் தம்மை அடையாளப்படுத்தும் தமிழ் மொழியை,  இந்தி ஆளப் பார்ப்பதாக குற்றம்சாட்டினார். ஒவ்வொரு கட்சியும் மற்றவர்களை குறை கூறிவருவதாக தெரிவித்த சீமான், வேறு என்ன மாற்று அரசியலை அவர்கள் மக்களிடம் முன் வைக்கின்றனர் என்று வேதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்