விஜயகாந்த் நலமுடன் உள்ளார் - பிரேமலதா
செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் நலமுடன் உள்ளதாக தெரிவித்தார்.
நீண்ட நேர பயணம் காரணமாக விமான நிலையத்தில் ஓய்வெடுத்ததாக தெரிவித்தார். தேர்தல் கூட்டணி குறித்து பேச தேமுதிக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து கட்சிகளும் தற்போது கூட்டணி தொடர்பாக பேசி கொண்டிருப்பதாவும் அவர் கூறினார். கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து விஜயகாந்த் நல்ல தகவலை 10 நாட்களுக்குள் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்றும் பிரேமலதா தெரிவித்தார்.
Next Story