ராகுலின் தலையீட்டால் காங்கிரசிலிருந்து வெளியேறினேன் - எஸ்.எம்.கிருஷ்ணா

46 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்த தாம் ராகுல் காந்தியின் தலையீடு காரணமாகவே, அக்கட்சியில் இருந்து வெளியேறியதாக பாஜக மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
ராகுலின் தலையீட்டால் காங்கிரசிலிருந்து வெளியேறினேன் - எஸ்.எம்.கிருஷ்ணா
x
கர்நாடக மாநிலம் மதூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மத்திய காங்கிரஸ் ஆட்சியின் போது ராகுல் காந்தி பெரிய பதவியில் இல்லாத போதும் கட்சியிலும் ஆட்சியிலும் தலையிட்டதாக கூறினார். 80 வயதுக்கு மேற்பட்டோர் அமைச்சர் பதவியில் இருக்க கூடாது என ராகுல் ரகசியமாக உத்தரவிட்டதால் தான் உடனடியாக ராஜினாமா செய்ததாகவும் கிருஷ்ணா தெரிவித்தார். ஆனால், தற்போது பிரதமர் மோடியின் தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்