"மின் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க ஆலோசனை" - அமைச்சர் தங்கமணி
மின்துறை ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து முதலமைச்சருடன் ஆலோசிக்க உள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கஜா புயலின் போது, 3 லட்சத்து 39 ஆயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்ததாகவும், மின்வாரிய ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் ஆகியோர் இரவுபகல் பாராமல், விரைந்து செயல்பட்டு மின் இணைப்பை இயல்பு நிலைக்கு கொண்டு வந்ததாகவும் கூறினார். மின்வாரிய ஊழியர்களுக்கு சென்னையில் முதலமைச்சர் தலைமையில் பாராட்டு விழா நடைபெறும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
Next Story