முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்...

முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று காலமானார்.
x
88 வயதான ஜார்ஜ் பெர்னாண்டஸ், அல்சைமர் எனப்படும் நரம்பியல் பாதிப்பு நோயால் அவதியுற்று வந்தார்.  இதற்காக கடந்த சில தினங்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக  உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  வாஜ்பாய் தலைமையிலான அரசில்,  பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸின் உடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். இதையடுத்து, இன்று மாலை அவரது உடல் அடக்கம் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்