"முதல்வர் சத்தமாக கூறினால் பொய்யாக இருக்கும்" - தினகரன்

"அதிமுக டெபாசிட் கூட வாங்காது" - தினகரன்
x
அரியலூரில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், உலக முதலீட்டாளர் மாநாடு வெற்றி என கூறுவது கானல் நீராகத்தான் இருக்கும், மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயலில் எடப்பாடி அரசு ஈடுபட்டுள்ளது என்றார். முன்பு எம்.பிக்களுக்கு ஜெயலலிதாவிடம் இருந்து உத்தரவுகள் வரும், ஆனால், தற்போது, மோடியிடம் இருந்து உத்தரவு வருவதாக தினகரன் விமர்சித்தார். அதிமுகவினர் கூட்டணி இல்லை என்று அறிவித்தால், அவர்கள் மீதுள்ள வழக்குகள் தீபாவளி பட்டாசு போல படபடவென வெளியே வரும் என தினகரன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்