"இட ஒதுக்கீடு குறித்த மத்திய அரசின் திட்டம் வரவேற்கத்தக்கது" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பொதுப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு கொண்டு வரும் திட்டத்தை தனிப்பட்ட முறையில் வரவேற்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
x
பொதுப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய  அரசு கொண்டு வரும் திட்டத்தை தனிப்பட்ட முறையில் வரவேற்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். சிவகாசியில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மண்டல் கமிஷன் கொண்டுவந்த  இட ஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருப்பதோடு, அனைத்து கட்சிகளின் கருத்துக்களை கேட்டறிந்து கொள்கை வடிவமாக அறிவிக்கப்பட வேண்டும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்