மீட்பு பணிகளில் திமுக அரசியல் பார்க்கவில்லை - துரைமுருகன்

கஜா புயல் நிவாரணப் பணிகளில் தமிழக அரசுக்கு அரசியல் வேறுபாடின்றி திமுக முழு ஒத்துழைப்பு தரும் என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
x
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரின் இல்லத்தில் துரைமுருகன்  சந்தித்து பேசினார். அப்போது கஜா புயல் சீரமைப்பு பணிகளுக்காக திமுக அறிவித்த ஒரு கோடி ரூபாய் நிதிக்கான காசோலையை முதலமைச்சரிடம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன் புயல் நிவாரணப் பணிகளில் தமிழக அரசுக்கு அரசியல் வேறுபாடில்லாமல் திமுக ஒத்துழைக்கும் என தெரிவித்தார்.  மக்களை திமுக போராட தூண்டுவதாக அனுபவமற்ற அமைச்சர்கள் கூறி வருவதாக அவர் குற்றம்சாட்டினார். மத்திய அரசிடம் கேட்கிற விதத்தில் கேட்டால் தான் நிதி கிடைக்கும் என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்