சதானந்த கவுடாவுக்கு கூடுதல் பொறுப்பு
மத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானதை அடுத்து, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இதுவரை அனந்த குமார் கவனித்து வந்தரசாயனம் மற்றும் உரத்துறை இலாகா, சதானந்த கவுடாவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இதேபோல, மத்திய ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், சுரங்கத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமருக்கு, நாடாளுமன்ற விவகாரத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது.
Next Story