20 தொகுதி அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் - முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் நாளை ஆலோசனை

20 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக பொறுப்பாளர்களின் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
20 தொகுதி அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் - முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் நாளை ஆலோசனை
x
திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட காலியாகவுள் 20 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக தேர்தல் பொறுப்பாளர்களை, அக்கட்சி தலைமை அண்மையில் நியமித்தது. இந்தநிலையில், இடைத்தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சரும் ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் தலைமையில், நாளை காலை பத்தரை மணிக்கு இந்த கூட்டம் தொடங்குகிறது. கூட்டத்தில் இடைத்தேர்தல் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்