சீன மொழியில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் சர்வதேச யோகா திருவிழா நடைபெற்றது.
சீன மொழியில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன்
x
சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் சர்வதேச யோகா திருவிழா நடைபெற்றது. போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்கும் பொருட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில், 'பூஜ பீதாசனம்' என்ற ஆசனத்தை 1330 பேர் செய்து காட்டினர். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், வெல்லமண்டி நடராஜன் மற்றும் யோகாவில் பத்மஸ்ரீ பட்டம் வென்ற ஞானம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற சீனாவை சேர்ந்தவர்களை சீன மொழியில் அமைச்சர் பாண்டியராஜன் வரவேற்றார். 


ருணாநிதி நினைவேந்தல் கூட்டம் - அமைச்சர் விளக்கம்

நிகழ்ச்சிக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், தமிழை பற்றி இரண்டாவது முறையாக 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது பெருமை அளிப்பதாக கூறினார். மேலும், 30ம் தேதி நடைபெறும் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்பதற்கு அ.தி.மு.க.வுக்கு அழைப்பு விடுக்காதது பற்றிய கேள்விக்கும் பதிலளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்