மகளிர் அணி சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி : கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, சென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
மகளிர் அணி சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி : கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு
x
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்  கனிமொழி தலைமையில், அக்கட்சியினர், சேப்பாக்கம்  கலைவாணர் அரங்கில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். கறுப்பு ஆடை அணிந்து, கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, சென்ற அவர்கள், மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தை அடைந்தனர். பின்னர் அவரது நினைவிடத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்