கருணாநிதி தேசிய அரசியலில் மிக உயர்ந்த தலைவர் - சோனியா காந்தி

திமுக தலைவர் கருணாநிதி மறைவால் ஆழ்ந்த வருத்தமடைந்து உள்ளதாக ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி தெரிவித்து உள்ளார்.
கருணாநிதி தேசிய அரசியலில் மிக உயர்ந்த தலைவர் - சோனியா காந்தி
x
* தமிழகம் மற்றும் தேசிய அரசியலில், மிக உயர்ந்த தலைவர் என புகழாரம் சூட்டி உள்ள சோனியா காந்தி,பொது வாழ்வில், கருணாநிதி உயர்ந்த இடத்தை எட்டி பிடித்திருந்ததாக குறிப்பிட்டு உள்ளார்.

* தனது நீண்ட வாழ்க்கை பயணத்தில், சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்காகவும், தமிழகத்தின் முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் வறுமை கோட்டிற்கு கீழுள்ள ஒவ்வொரு குடிமகனின் நலனுக்காகவும் ஓய்வின்றி உழைத்தவர், கருணாநிதி என்றும் அவர் கூறியுள்ளார். 

* மறைந்த தலைவர் கருணாநிதி, தமக்கு ஒரு தந்தையை போன்றவர் என குறிப்பிட்டு உள்ள சோனியாகாந்தி, அவரது மறைவு தனிப்பட்ட முறையில்  தனக்கு இழப்பு  என்றும், 

* கருணாநிதியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பதிவு செய்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்