18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : இருவேறு நீதிபதிகளின் மாறுபட்ட கருத்து

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இருவேறு நீதிபதிகளின் மாறுபட்ட கருத்துக்கள்
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : இருவேறு நீதிபதிகளின் மாறுபட்ட கருத்து
x

தீர்ப்பில் தலைமை நீதிபதி கருத்து :-

* 1994ல் அதிமுக எம்எல்ஏ ஜி.விஸ்வநாதன், மதிமுகவுக்கு போனதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், கட்சி பொறுப்பை விட்டுக் கொடுக்க அவசியமில்லை, மறைமுகமாக செய்தாலும் தகுதி நீக்கம் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர் - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.

* 18 எம்எல்ஏக்களும் சபாநாயகர் காழ்ப்புணர்ச்சி காரணமாக பாரபட்சமாக செயல்படுகிறார் என நிரூபிக்க தவறிவிட்டனர் - தலைமை நீதிபதி.

* 18 எம்எல்ஏக்களும் பதிலளிக்க சபாநாயகர் வாய்ப்பு கொடுத்தார், ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது - தலைமை நீதிபதி.

* 18 எம்எல்ஏக்களும் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என கட்சிக்குள் எழுப்பியதாக எந்த ஆதாரமும் இல்லை - தலைமை நீதிபதி.

* முதலமைச்சராக வேறு யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை சபாநாயகரிடமோ, நீதிமன்றத்திடமோ தெரிவிக்கவில்லை - தலைமை நீதிபதி.

* அரசியல் சாசனப் பிரிவு 212-ன்படி சட்டமன்றத்தில் நடக்கக்கூடிய நிகழ்வுகளில், சரியான நடைமுறை பின்பற்றப்படவில்லை என்ற காரணத்தினாலேயே நீதிமன்றம் தலையிட முடியாது - தலைமை நீதிபதி.

தீர்ப்பில் நீதிபதி சுந்தர் கருத்து :-

* ஆளுநரிடம் முதலமைச்சரை பதவி நீக்கம் செய்யக்கோரி ஜக்கையன் எம்எல்ஏதான் முதலில் கடிதம் அளித்தார், ஆனால் அவரை தகுதிநீக்கம் செய்யாதது முரண்பாடாக உள்ளது - நீதிபதி சுந்தர்.

* ஜக்கையன் தெரிவித்த கருத்துக்கு, பதிலளிக்க 18 எம்எல்ஏக்களுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை - நீதிபதி சுந்தர்

* சபாநாயகர் 18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யும்போது, அதிமுக யாருக்கு என்பதே முடிவு ஆகவில்லை - நீதிபதி சுந்தர்.

* சட்டமன்ற உறுப்பினரை தகுதி நீக்க சபாநாயகர் எடுக்கும் முடிவு, வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்திருக்கிறாரா என்ற அடிப்படையில் இருக்க வேண்டும் - நீதிபதி சுந்தர்.

* வழக்கு விசாரணையின்போது, 40 வழக்குகளின் அடிப்படையில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது - நீதிபதி சுந்தர்.



Next Story

மேலும் செய்திகள்