"வரும் 12ல் மேட்டூர் அணை திறப்பு இல்லை" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் திட்டவட்டம்
மேட்டூர் அணையில் நீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளதால் வரும் 12ஆம் தேதி அணையை திறக்க இயலாது என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் இந்த அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். பருவமழை குறைவு உள்ளிட்ட காரணங்களால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39 புள்ளி 42 அடியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். போதிய நீர் இல்லை என்பதால் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை வரும் 12ஆம் தேதி திறக்க இயலாது என தெரிவித்தார். காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு குறுவை சாகுபடி விவசாயிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story