ரூ.1.10 கோடி மதிப்பிலான ஷூக்களை பதுக்கிவிட்டு ஓட்டுநர் செய்த காரியம்

x

ஒசூர் அருகே ரூபாய் ஒரு கோடியே பத்து லட்சம் மதிப்பிலான ஷூக்களை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.ஒசூர் அருகே கர்நாடக எல்லைப்பகுதியான செட்டிஅள்ளி என்ற பகுதியில் தனியார் ஷூ ஷோரூம் உள்ளது. இங்கு லாரி ஓட்டுநராக உள்ள அஹமத் என்பவர், ஷோரூமில் இருந்து ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 558 ஷூக்களை குடோனுக்கு எடுத்து சென்றுள்ளார். ஆனால் குடோனுக்கு ஷூக்கள் வராத நிலையில், காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஜிபிஎஸ் உதவியுடன், லாரியின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், லாரியில் இருந்த ஷூக்களையும், அஹமத்-ஐயும் காணவில்லை. இதனையடுத்து, போலீசாரின் தொடர் விசாரணையில், அஹமத் ஷூக்களை, ராஜா பாளையம் என்னும் இடத்தில் பதுக்கி வைத்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதனையடுத்து அஹமத் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்