வெகு விமரிசையாக நடைபெற்ற திருப்பதி திருக்குடைகள், தங்கப் பாதங்கள் யாத்திரை புறப்பாடு

x

திருப்பதி திருமலை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 12-ஆம் ஆண்டு திருப்பதி திருக்குடைகள் மற்றும் தங்கப் பாதங்கள் யாத்திரை புறப்பாடு வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் ரங்கநாதன் சன்னதியில் இருந்து கடந்த 3-ஆம் தேதி தொடங்கிய திருப்பதி திருக்குடைகள் பயணம், குடியாத்தம் சந்தப்பேட்டையில் உள்ள சீதாராம ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவிலுக்கு வந்துள்ளது. சந்தப்பேட்டையில் இருந்து, பஜனை பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, பின்னர் திருப்பதி திருமலைக்கு யாத்திரை புறப்பாடு நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்