மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதல்.. நடுக்கடலில் பரபரப்பு சம்பவம்

x

மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதல்.. நடுக்கடலில் பரபரப்பு சம்பவம்

காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி, காரைக்கால் மேடு கிராமத்தைச் சேர்ந்த தனசீலன் என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில், நேற்று முன்தினம் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 7 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள், நேற்று கோடிக்கரைக்கு தென்கிழக்கில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர், மீனவர்களை கடுமையாக தாக்கி இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்கள், திசை காட்டும் கருவி, செல்போன் உள்ளிட்டவற்றைப் பறித்துச் சென்றனர்.

இலங்கை கடற்படையினர் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை கரைக்கு திரும்பிய 7 மீனவர்களுக்கும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்