சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் தெப்ப உற்சவம் விழா.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

x

புதுச்சேரி, சாரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்ப உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. சாரம் பகுதியில் அமைந்துள்ள சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில், கடந்த 12 ஆம் தேதி முதல் கந்தசஷ்டி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்ட வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி ஊர்வலமாக அம்மன் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள தெப்பகுளத்தில் 9-முறை சுற்றிய சுவாமிகளை திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்