"கடந்த 10 நாட்களில் ரூ.40.25 கோடி உண்டியல் காணிக்கை".. திருப்பதி கோவில் நிர்வாகம் தகவல்

x

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திறக்கப்பட்ட சொர்க்கவாசல் நேற்று இரவோடு அடைக்கப்பட்டது. இந்நிலையில், சொர்க்கவாசல் திறந்திருந்த நாட்களில் 6 லட்சத்து 47 ஆயிரத்து 452 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக தெரிவித்துள்ள கோவில் நிர்வாகம், டிக்கெட் வாங்கி ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 390 பக்தர்கள் தரிசனத்திற்கு வரவில்லை என குறிப்பிட்டுள்ளது. மேலும் வைகுண்ட ஏகாதசியின் 10 நாட்களில் 40 கோடியே 25 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைக்கப்பெற்றதாகவும், 35 லட்சத்து 60 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்