கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்ட ராமர் சிலை...`ஜெய் ஸ்ரீராம்' என கோஷமிட்ட பக்தர்கள்

x

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலின் திறப்பு விழா வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நேரில் காண நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் அயோத்தி நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் கருவறைக்குள் ராமர் சிலை கொண்டு செல்லப்பட்டது. அப்போது அங்கிருந்தோர் ஜெய் ஸ்ரீ ராம் என்று பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர். கிரேன் உதவியுடன் ராமர் சிலை கோவிலுக்குள் கொண்டு செல்வதற்கு முன் கருவறையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்