கோவிலை மாப் போட்டு சுத்தம் செய்த பிரதமர் மோடி | PM MODI | TEMPLE

x

மகாராஷ்ட்ர மா​நிலம் பஞ்சவடியில் அமைந்துள்ள, காலா ராமர் ஆலயத்​தில், பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு நடத்தினார். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று முதல் 11 நாட்களுக்கு விரதம் உள்ளிட்ட பூஜைகளை பிரதமர் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், நாசிக்கை அடுத்துள்ள பஞ்சவடி காலா ராமர் ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். இதைத்தொடர்ந்து, ஒரு வாளியில் தண்ணீர் எடுத்துக்கொண்டு ஆலயத்தை தூய்மை செய்தார். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 22-ம் தேதி வரை ஆலயங்கள் மற்றும் ஆன்மீக தலங்களில் பொதுமக்கள் தூய்மை பணிகளை மேற்கொள்ள பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்