"தரிசன டிக்கெட் இல்லாமல் வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை" - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிரடி

x

வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு ஆகியவற்றை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள கவுண்டர்களில் அடுத்த மாதம் 1ம் தேதி வரை பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டோக்கன்கள் தீர்ந்து விட்டன. இலவச தரிசன டோக்கன்கள், 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு தரிசன டிக்கெட் இல்லாமல் வரும் பக்தர்களுக்கு திருப்பதி மலையில் அடுத்த மாதம் 1ம் தேதி வரை தரிசன அனுமதி கிடையாது. நேற்று ஒரே நாளில் 63 ஆயிரத்து 500 பேர் ஏழுமலையானை தரிசித்துள்ளனர்... இதன் மூலம் உண்டியல் காணிக்கையாக 5 கோடியே 5 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது..


Next Story

மேலும் செய்திகள்