மனைவிக்கு எமனான கணவன் - நாட்டுத் துப்பாக்கியை வைத்து பாடம் புகட்டிய உறவினர்கள்... கிருஷ்ணகிரியை அதிர வைத்த சம்பவம்

x

கிருஷ்ணகிரி அருகே, குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

கல்லாவி அடுத்த வெள்ளிமலை அருகே வசித்து வந்த சின்னமுத்து என்பவர், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த மனைவி சீதாவை, வாக்குவாதத்தின் போது கத்தியால் குத்திக் கொலை செய்தார். இந்த சம்பவத்தில் சின்னமுத்து தலைமறைவாக இருந்து வந்த நிலையில், போலீசார் அவரை தேடி வந்தனர். இதனிடையே, சின்னமுத்துவை கண்ட உயிரிழந்த சீதாவின் உறவினர்கள், நாட்டுத் துப்பாக்கியில் ரவை செலுத்தி, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார், சின்னமுத்துவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்,நாட்டுத் துப்பாக்கியால் தாக்கிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்