பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்! இணையத்தில் வீடியோ வெளியிட்ட கும்பல்! உபியில் கொடூர சம்பவம்

x

உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணை கடத்தி 6 பேர், பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசூலாபாத் மாவட்டத்தில், நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளம் பெண்ணை, ஆறு பேர் கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர். அதனை ஒருவர் வீடியோ எடுக்க மற்றவர்கள் அதனை வீடியோ எடுத்த நிலையில் அவை சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகி உள்ளது. இளம் பெண் கூச்சலிட உள்ளூர் வாசிகள் விரைந்து வந்த நிலையில் ஆறு பேரும், தலை தெறிக்க ஓடினர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து முதற்கட்டமாக ஐந்து பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்