சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

x

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட 4 நாட்களில், 2 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக, கடந்த 17ஆம் தேதி திறக்கப்பட்டது. கொரோனா காரணமாக கோயிலில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், கடந்த 4 நாட்களில் 2 லட்சம் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துள்ளனர். வரும் நாட்களில், தினசரி 1 லட்சம் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க சபரிமலை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்