சாப்ட்வேர் என்ஜினீயர் தன் மனைவியுடன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு - ஓசூர் அருகே அதிர்ச்சி

x

ஓசூர் அருகே சாப்ட்வேர் இன்ஜினியர் மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்த வம்சிதர் தனது மனைவியுடன், தளியில் வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். வம்சிதர் பெங்களூருவில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்த நிலையில், அவரது வீடு 3 நாட்களாக திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது, இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....


Next Story

மேலும் செய்திகள்