"இந்தியா இந்து நாடாக மாறினால் ஆபத்து" - சர்ச்சையை ஏற்படுத்திய சித்தராமையாவின் மகன்

x

இந்தியா இந்து நாடாக மாறினால் அதைவிட ஆபத்து வேறு எதுவும் இல்லை என, கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா தெரிவித்துள்ளார்.கர்நாடக மாநிலம் தாவனகெரே மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சித்தராமையாவின் மகன் யதீந்திரா, நமது நாடு இந்து நாடாக மாறக்கூடாது என்றும், இந்து நாடாக மாறினால் நமது நாடு, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானாக மாறிவிடும் என்றும் தெரிவித்தார். பாகிஸ்தானும், அப்கானிஸ்தானும் மதத்தின் பெயரால், சர்வாதிகாரத்தால் திவாலாகிவிட்டதாகவும், மதச்சார்பின்மையை விட்டுவிட்டு மதத்தின் பின்னால் சென்றால் நாடு வளர்ச்சியடையாது என்றும் குறிப்பிட்டார். பா.ஜ.கவின் துணை அமைப்புகள் இந்து நாட்டை உருவாக்கப் போவதாகவும், மதத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். யதீந்திராவின் இந்தப் பேச்சு கர்நாடக அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்