பல கோடி மதிப்புள்ள போதைப்பொருள் - பின்னணியில் சிக்கிய ஈரான் பாகிஸ்தான்

x

குஜராத் கடல் பகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குஜராத் போர்பந்தர் கடல் பகுதியில், போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினருடன் இந்திய கடற்படை இணைந்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. இதில் படகில் போதைப்பொருட்களை கடத்திய ஈரான் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மெத்தபெட்டமைன் உட்பட 3

ஆயிரத்து 300 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் சந்தை மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்