அனுமதி கேட்ட CPI - தலைமை தேர்தல் அதிகாரி கொடுத்த ரிப்ளை

x

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தின நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரியுள்ளதாகவும், இதற்கான அனுமதி மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வழங்கப்படும் என்று, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார். வரும் 1-ம் தேதி

தொழிலாளர் தினமான மே தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தொழிலாளர் அமைப்புகள் கூட்டம், பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இந்நிகழ்ச்சிகளுக்கு, அனுமதி அளிக்க வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தலைமை தேர்தல் அதிகாரியிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதற்கான அனுமதிகளை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வழங்க வேண்டும் என்பதால், அவர்களுக்கு தெரிவிக்கப்பட உள்ளதாக, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்