நெடுஞ்சாலையில் பைக் ஸ்டண்ட் "எமனை 'வா வா' என அழைக்கும் இளைஞர்" இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி

x

ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், இளைஞர் ஒருவர் திடீரென பைக் சாகசத்தில் ஈடுபட்டதை அவ்வழியாகச் சென்ற நபர்கள் வீடியோ எடுத்தனர். ஓசூர் மூக்கண்டப்பள்ளி என்ற இடத்தில் பைக்கில் சென்ற இளைஞர் ஒருவர், திடீரென பைக்கின் முன்சக்கரத்தை தூக்கியவாறு ஓட்டிச் சென்றார். இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். நீண்ட தூரத்திற்கு அந்த இளைஞர் சாகசத்தில் ஈடுபட்ட நிலையில், இதுபோன்ற செயல்களை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்