வீட்டின் கீழே வசித்த வங்கி...ஊழியரால் தேடி வந்த வினை...கண்முன் மாயாஜாலம்.. மாயமான பல லட்சம்

x

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்தவர் ராஜராஜேஸ்வரி. இவரது வங்கி கணக்கிலிருந்து வேறொரு கணக்கிற்கு 15 லட்ச ரூபாய் மாற்றப்பட்டதாக, அவருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதுகுறித்த புகாரை போலீசார் விசாரித்தபோது, ராஜ்குமார் என்பவருக்கு பணம் மாற்றப்பட்டது தெரியவந்தது. இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ராஜராஜேஸ்வரி, தனது வீட்டின் கீழ் தளத்தில் வசிக்கும் வங்கி ஊழியர் தட்சிணாமூர்த்தி மீது சந்தேகம் தெரிவித்துள்ளார். தட்சிணாமூர்த்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் வங்கியின் மொபைல் செயலியை சரிசெய்து தருவதாக கூறி ராஜராஜேஸ்வரியிடமிருந்து செல்போனை பெற்று, பணத்தை மாற்றியது தெரியவந்தது. அந்த பணத்தை வங்கியில் இருந்து அனுப்புவது போல் ராஜ்குமாருக்கு அனுப்பி, வட்டி பெற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து தட்சிணாமூர்த்தியை கைது செய்த போலீசார், பணத்தையும் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்