விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல் - கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்
ஆந்திராவில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில், சிலையை முதலில் கரைப்பது தொடர்பாக இரு கட்சியினர் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆவேசம் அடைந்த ஆளும் கட்சி தொண்டர்கள், தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களை கட்டைகளால் தாக்கியுள்ளனர். மேலும் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகியின் வீட்டை அடித்து நொறுக்கி தீவைத்தனர்.
Next Story