தெலங்கானாவில் இரவு நேர ஊரடங்கு - இன்று முதல் ஏப்.30 வரை அமல்படுத்தப்படுகிறது

தெலங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
x
தெலங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, இன்று முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது. உணவகங்கள், பார், வணிக வளாகங்கள் இரவு 9 மணிக்கு மேல் செயல்படக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மருத்துவமனைகள், மருந்தகங்கள் இரவு நேரங்களில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருள்கள் இரவு நேரத்தில் போக்குவரத்தில் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்