தெலங்கானாவில் இரவு நேர ஊரடங்கு - இன்று முதல் ஏப்.30 வரை அமல்படுத்தப்படுகிறது
தெலங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தெலங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, இன்று முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது. உணவகங்கள், பார், வணிக வளாகங்கள் இரவு 9 மணிக்கு மேல் செயல்படக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மருத்துவமனைகள், மருந்தகங்கள் இரவு நேரங்களில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருள்கள் இரவு நேரத்தில் போக்குவரத்தில் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story