உலக தடுப்பூசித் திட்டம்: சர்வதேச மையமாக இந்தியா திகழ்கிறது - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

உலக தடுப்பூசித் திட்டத்தின் சர்வதேச மையமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
உலக தடுப்பூசித் திட்டம்: சர்வதேச மையமாக இந்தியா திகழ்கிறது - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
x
உத்தரப் பிரதேசத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ராமச்சந்திரா மிஷன் நிறுவனத்தின் 75 ஆம் ஆண்டு நிறைவு தினம் நடைபெற்றது. இதில் காணொலி மூலம் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, கடந்த 6 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய மக்கள் நலத் திட்டங்களை நாடு செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டார். ஏழைகளுக்கு கவுரவமான வாழ்க்கையும், வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுப்பதையே  நோக்கமாக கொண்டு இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போர், ஒட்டுமொத்த உலகிற்கே உந்து சக்தியாக திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். ஆரோக்கியமான பூமியை உருவாக்குவதில் நமது யோகாவும் ஆயுர்வேதமும் பெரும் பங்களிப்பை அளிக்க முடியும் என தெரிவித்த பிரதமர் மோடி,  உலகிற்கு புரியும் மொழியில் அதனை எடுத்துச் செல்ல இந்தியா திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்