ருத்ர தாண்டவம் ஆடிய இயற்கை

உத்தரகாண்டில் பனிப்பாறைகள் வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமாகியுள்ள 170 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ருத்ர தாண்டவம் ஆடிய இயற்கை
x
உத்தரகாண்டில் பனிப்பாறைகள் வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமாகியுள்ள 170 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

உத்தரபிரதேசத்தில் இயற்கை அண்ணை நிகழ்த்திய ரூத்ர தாண்டவ காட்சிகள் தான் இவை. அந்த மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் ஜோஷிமத் மலைப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மலைப்பகுதியில் நீர்மின் பனிப்பாறைகள் திடீரென வெடித்து உருகியது. இதனால் தவுலிகங்கா ஆறுகளில் திட்டத்திற்காக கட்டப்பட்ட 2 கட்டமைப்புகள் அடுத்தடுத்து உடைத்தன.

கரைபுரண்டு ஓடிய வெள்ளம் கிராமங்களுக்குள் பாய்ந்ததில் 200-க்கும் மேற்பட்டவர்கள் அடித்து செல்லப்பட்ட நிலையில், பலர் உயிரிடனும், சிலர் சடலமாகவும் மீட்கப்பட்டனர்.

எனினும் மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியை மேற்கொண்டு வரும் நிலையில் 170-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமமே பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளது. வெள்ளத்துடன் சேர்ந்த பாறைகளும் அதிவேகத்தில் வந்ததால் ஒன்றும் செய்யமுடிவில்லை என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். 

காணாமல் போனவர்களின் பெரும்பாலானோர் நீர்மின் திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் தான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் 50 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே சுரங்கத்தில் கும்பைகளுடன் சிக்கியிருந்த 16 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 

வெள்ளத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உத்தரகாண்ட் மாநில அரசு  சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் அறிவித்துள்ளார். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி,  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், என பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதேபோல் உலக நாட்டு தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளளனர். பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல், அமெரிக்க உள்துறை, ஆஸ்திரேலிய துணை பிரதமர், நேபாள நாட்டு வெளியுறவுத்துறை என உலக நாடுகள் தங்களது இரங்கலையும் உயிரிழந்தவர்களின்  குடும்பங்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளன. 

இந்த இயற்கை பேரிடரில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்